துறையூரில் பகுதிகளில் உங்களுக்கு தேவையான அனைத்து விடயங்களும் இங்கு பார்க்கலாம்.

வானிலை அறிக்கை



துறையூர் மக்கள் கவலை - சாலை பணி நிறைவு செய்யாததால்



துறையூர் பிரிவு ரோடு, பெரம்பலூர் புறவழி சாலையில் புதிதாக கழிவு நீர் வாய்க்கால் அமைக்க ரோடு தோண்டப்பட்டு பணிகள் நிறைவடைந்த நிலையில் சாலை சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது. நகரின் முக்கிய பகுதியாகவும், கனரக வாகனங்கள் செல்லும் முக்கிய பகுதியாகவும் உள்ளதால் அந்த வழியாக சாலையைக் கடக்கும் வாகன ஓட்டிகள் சீரமைக்கப்படாமல் இருக்கும் ரோட்டில் பயணிக்கும் போது மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.


மேலும் சாலையின் நடுவே பள்ளம் இருப்பது தெரியாமல் கடக்கும் வாகனத்தினால் விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் நடந்து செல்பவர்களுக்கு உள்ளது மழை பெய்தால் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்பதால் எளிதில் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே துறையூர் சட்ட மன்ற உறுப்பினர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறையினரை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்