துறையூரில் பகுதிகளில் உங்களுக்கு தேவையான அனைத்து விடயங்களும் இங்கு பார்க்கலாம்.

வானிலை அறிக்கை



துறையூரில் கொரோனா உச்சக்கட்டம் | சாலைகள் அடைக்கப்பட்டது



தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தின் தலைநகராக இருக்கும் சென்னையில் கொரோனா வைரஸ் பரவல் அதிதீவிரமாக பரவி வருகிறது. கொரோனா வைரசால் அடுத்தடுத்து பலரும் பாதிக்கப்படுகின்றனர். நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 4 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியிலிலும் கொரோன வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. அதனால் துறையூர் நகராட்சி சார்பாக கொரானா தோற்று உள்ள பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அது தவிர துறையூர் நகரில் பல பகுதிகளுக்கு செல்ல முடியாத வகையில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது.


பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள். முடிந்தவரை வெளியில் செல்வதை தவிர்க்கவும்